தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

Filed under: , , by: மஹாராஜா


தோழர் தோழிகளுக்கும் ,

மற்றும் வலை உலக நண்பர்களுக்கும் இனிய
தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

இந்த தீபாவளி உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தார்க்கும்
மற்றும் அனைவருக்கும் மிகவும் சந்தோஷத்தையும்
ஒற்றுமையையும் கொடுத்து எல்லாம் வல்ல
இறைவனின் அருளை பெற எனது மனமார்ந்த
வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன்........









வாழ்த்துகளுடன்
நண்பன் மஹா......

பிரிவு

Filed under: , , , , , by: மஹாராஜா








இதோ இன்றும் ஒரு ரசனையற்ற மரக்கட்டையை
போல் நகர்கிறது எனது வாழ்க்கை பயணம்..
மரணம் வெகு அருகில் தான் உள்ளது என்பதை
ஒவ்வொரு முறையும் உணர்த்தி செல்கிறது
உனது புன்முறுவல் சிரிப்பின் நினைவுகள்....

****************

நாட்கள் கடந்து பயணித்து செல்கின்றன..
ஒரு நீண்ட பயணத்தின் போது உன் நினைவை
அழைத்து சிறிது கண்ணிருடன் நான் சொன்ன
வார்த்தை "இப்பிரிவு நிரந்தரமற்றதாகவே இருக்கட்டும்.."


************************


மாதங்கள் பல கழிந்து ஒரு மாலை பொழுதில்
உன்னிடம் இருந்து வரும் தொலைபேசி
அழைப்பினை வேண்டுமென்றே துண்டித்த
பிறகு இருவரும்..

மௌனத்தினால்..திட்டிகொண்டோம்
அவர் அவர் மனதிற்குள்..

********************.

தொடரும் கவித்துவமான தவறுகள்

Filed under: , , , , by: மஹாராஜா







தேடலின் தொடக்கம் , முடிந்த ஒன்றை
முழுமுயற்சியாய் தேடுகிறேன். அதோ ஒரு நீல
நிற ஆன்மாவை நோக்கி நடந்து செல்கையில்
எனக்கே தெரியாமல் முடிகிறது எனது
பயணம்.. எங்கே நான்?



**** **** **** *****



சூரியனை விழுங்கி , சந்திரன் தன்னை வெளிக்கொணரும்
ஒரு மாலை நேரம் அவளுடைய நினைவை தாங்க
முடியாமல் ஒரு சிறிய காணிக்கையாய் எனது
சிவப்புகளை பூமிக்கு சமர்பித்து விடைபெறுகிறேன்...


**** **** **** ****




பிரிதலின் உச்சத்தில் நீ விலகையில்
நான் உன்னைதொடர்ந்து நான் பயணித்த
எனது தேடல் பயணம் இன்றும் தொடர்கிறது
முடிவில்லா கடற்கரையாய்........


**** ***** ***** *****

பிறந்த நாள்.. கவிதை

Filed under: , , by: மஹாராஜா


எனது தேசிய தினம் கூட மறந்துவிடுகிறது..
இத தேவதையின் பிறந்த நாளுக்காக..!.

நான் அனுப்பும் பிறந்த நாள்
பரிசுகளைசேகரிக்க வேண்டுமானாலும் பரவாயில்லை..
சேதபடுத்திவிடாதே.....

அது என்னவோ தெரியவில்லை..
உன்னுடைய பிறந்தநாள் மட்டும் ஒரு
திருவிழாவாக தெரிகிறதே எனக்கு...

இன்றாவது உனது காதலை சொல்ல மாட்டாயா..?
என எதிர்பார்த்து.. உனதுபிறந்த நாளை வரவேற்கிறேன்..
ஒவ்வொரு வருடமும்...எனக்கு தெரியும்..
சென்ற வருடம் போல்தான் இந்த வருடமும்
என்று.. இருந்தும் வாழ்த்துகிறேன்..உன்னை..
இன்றாவது எனது வாழ்த்தை ஏற்றுகொல்கிறாய்
என்ற சந்தோஷத்தில்...

கொஞ்சம் மோகமும் , கொஞ்சம் கோபமும்

Filed under: , , , , , by: மஹாராஜா













நமது கண்களும் நினைவும் மீண்டு
உயிர்த்தெழும் வரை போரிட்டு கொண்டே
இருப்பேன் எனது இதழ்களால்.....
பார்ப்போம் வெற்றி யாருக்கு கிட்டும் என்று....!.!..!





















உனது ஸ்பரிசம் தொட்டு எனது காதலை
வெளிப்படுத்திய இடம்...என் காதல்
அழியவில்லை என்பதற்கு இதைவிட
வேறென்ன சாட்சி வேண்டும் எனக்கு...
போடி....
















உரையாடலின் உச்சத்தில் இருக்கும் போது
என்னை திசை மாற்றி விட்டுவிட்டு நீ
கொடுக்கும் முத்தம் எல்லாம் இன்று
வசை பாடிவிட்டு திசை மாறி போனது.. ஏனடி...?
புரியவில்லை எனக்கு உன் கோபம்...
இது நிரந்தரமற்றதாகவே இருக்கட்டும்...















இயலாமையின் வலியின் உச்சத்தில்
இருக்கும் என் மனது அதன் விரக்தியை
என்னுள் இருந்து குருதியை வெளியேற்றி
அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறது... நான்
தோற்றுக்கொண்டே இருக்கிறேன்...



















அன்று உனக்காக நான் வாங்கிய வெள்ளை
ரோஜா இன்றும் என் கையில்....சிறு மாற்றம்
வர்ணம் மட்டும் சிகப்பாய் மாறியுள்ளது.
இன்னும் சில நேரங்களில் அதனை பற்றி
இருக்கும் எனது கரமும் மாற தொடங்கிவிடும்..

அழைபேசி..அழகி பேசி.....அழகாய் பேசி..

Filed under: , , , , , by: மஹாராஜா

நீ தொடர்புகொண்டு என்னிடம்
பேசும் போது எல்லாம் நான்
தொடர்பிழந்து நிற்கிறேனே ஏனடி...?
இன்னும் புரியவில்லை காரணம் எனக்கு...!

* * * - - - - - - -

ஒரு முனையில் நீ..
மறுமுனையில் நான்...
சத்தம் மட்டும் இல்லை...
ஆனால் பேசுகிறோம்..
அது உனக்கும் தெரியும்..எனக்கும் தெரியும்.

*** - - - - - - - -

தொலைபேசியில் பேசும் போது
முத்தம் தரவில்லை என்று வருத்தபடுகிறாய்,
நாம் பேசும் போது நமக்கு பதில் , நமது வார்த்தைகள்
ஒன்றை ஒன்று முத்தமிட்டு கொண்டுதான் உன்னையும் என்னையும்
வந்தடைகிறது என்பதை நான் எப்படி சொல்லி
புரியவைப்பேன் உன்னிடம்...!

*** - - - - - - -

உன்னிடம் பேசுகையில்
உன் "ஹம் ", "ப்ச்" , "ஹேய்"
இந்த வார்த்தைகளுக்கு நடுவில்
மற்றவை தோற்று போய் நிற்கின்றன.
காரணமே தெரியாமல்..

*** - - - - -- - -

திமிர் பிடித்த காதல்

Filed under: , , , , by: மஹாராஜா

*

சொல்லுவதற்க்காக நான் சென்ற
ஒவ்வொரு நாட்களும்
நீ என்னை கொல்லுவதற்காக (உன் பார்வையால்)
வந்தாய் என்பது ஏன் எனக்கு அப்போது
தெரியாமல் போய்விட்டது..?

*

பல நாட்களுக்கு பிறகு நமது
காதல் கடிதத்தை படிக்கும் போது
சிறு காயம் ஏற்படுத்திவிட்டது..ஒன்றும் இல்லை..
மனதின் வலியில் கொதித்து கொண்டு இருந்த
கண்ணீர் துளி ஒன்று கரம் தொட்டு
சிரித்துவிட்டு சென்றது..

*

இருமுறை காதல் கொள்ளும்
தோழமைகளே.. உங்களுக்கு
மட்டும் எப்படி முடிகிறது..?
கடவுள் இரு மனசையாய்
கொடுத்துள்ளான்..?

*

வரம் ஒன்று கேட்க வேண்டும் என்றால்
இரவு நேரத்தில் மட்டும் எனது உயிரை
எடுத்துகொண்டு பகலில் கொடுத்துவிடு
இறைவனே.? இனியும் வேண்டாம்
எனது செத்து பிழைக்கும் விளையாட்டு
இரவில்..

*

காதல் சண்டை...

Filed under: , , , by: மஹாராஜா



மௌனத்திற்கு பிறகு விடுதலை பெற்று கொண்டு
வரும் உன் வார்த்தையை, உனது அந்த கொஞ்சலான
கோபத்தை ரசிப்பதற்காகவே உன்னுடன் பல
சண்டைகள் போடலாம் என் செல்லமே..
உன்னுடன் நான் போடும் சண்டை
எல்லாம் உன் மௌனத்தை ரசிப்பதற்கு தான் என்பதை
எப்படி சொல்லி புரிய வைப்பேன்..?
மீண்டும் ஒரு முறை சண்டையிடவா..?

*****




புல்வெளி நடுவே நாம் அமர்ந்து
காதல் கொள்ளும் நேரம் நாம்
பார்த்த அந்த இரண்டு வண்ணத்து பூச்சும்
ஒன்றை ஒன்று சண்டையிட்டு கொண்டு
சேர்ந்தவுடன் நான் உன்னை பார்த்ததும்
நீ வெட்கப்பட்டு விலகி சென்றாயே..அதற்க்கு
என்ன அர்த்தம்..?

*****




உன்னுடன் நான் சில்மிஷம் செய்துவிட்டு
எழுந்து ஓடும் போது நீ என்னை துரத்தி
கொண்டு வரும் போதெல்லாம் நீ என்னை
பிடிப்பதற்காகவே நான் எத்தனை முறை
என்னை தோற்கடித்து இருக்கிறேன் தெரியுமா..?

*****

மின்சார பார்வை...

Filed under: , , by: மஹாராஜா

ஒவ்வொரு நாளும் உன்னுடைய வீட்டை
கடந்து செல்லும் போது உனது மின் பார்வையில்
இருந்து மீளாமல் செல்ல முடியவில்லை..

**

ஊரெல்லாம் மின்சார தட்டுப்பாடு...
இவளின் கண்களில் மட்டும் எப்படி
இவ்வளவு பவர்..?

**

உனது கடைக்கண் பார்வை பட்டு எரி நட்சத்திரமாய்
கீழே விழும் என்னை ஒரு முத்தம் கொடுத்து
எழுப்ப கூடாதா..?

**

ஐன்ஸ்டீன் வாழும் காலம் நீ இல்லை...
இல்லை என்றால் மின்சாரம் கண்டுபிடிக்காமல்
போய் இருக்க கூடும்...

**

ஒரு கண்களால் என்னை பார்க்கும் போதே
இப்படி ஆகின்றேனே.. இரண்டு கண்ணால் பார்த்தால்..?

**

நீ பேசி கேட்டதை விட..உன் கண்கள் பேசி
பார்த்ததே அதிகம் எனக்கு...

**

குறிப்பு...:

நாமளும் மத்தவங்க போல சும்மா இருந்துடலாம் என்று நினைச்சா ரசிகர்கள் தொல்லை தாங்க முடியவில்லை.... இங்க பதிவர் வட்டத்துல நிறைய பேரு ஒளிஞ்சிகிட்டு இருக்காங்க.. அவங்க எல்லாரும் யாருன்னு நான் சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்ல... உங்களுக்கே புரியும் என்று நினைக்கிறேன்...

சொல்ல வந்த காதல்.!

Filed under: , , by: மஹாராஜா

*
எத்தனை முறை உன்னிடம்
என் காதலை சொல்லி இருக்கேன் தெரியுமா..?
உனக்கு தெரியாது......
உன் நிழலிடம் கேட்டுப்பார்..

*

உன் முகத்தை பார்த்து சொல்ல தைரியம்
இல்லாத நான் எனது காதலை
எத்தனை முறை பாதியிலேயே
கொட்டிவிட்டு சென்று இருக்கேன்
தெரியுமா உனக்கு.?

*

எனது வீட்டு ரச கண்ணாடி
என்னை காதலிக்கிறதாம்
உன்னிடம் நான் காதலை
சொல்லுவதற்கு முன் ஒத்திசை
நடத்தியதின் பரிகாரம்..

*

எனக்கு தெரியும் சொல்லிய காதலை
விட சொல்லாத காதலே சிறந்தது என்று..
உன்னிடம் சொல்லிவிட்டு நான்
காதல் அவஸ்தை படுவதை விட
சொல்லாமலே போய்விடுகிறேன்..

*

மீண்டும் ஒரு ஜென்மம் ஒன்று இருந்தால்
தயவு செய்து எனது காதலியாக இருந்து விடாதே.
பாவம் நான்...காதல்...சாதல்....

*

கவிதைகள் எனப்படும்

Filed under: , , by: மஹாராஜா

சற்று முன் கிடைத்த தகவல் படி.!

Filed under: , , by: மஹாராஜா



சற்று முன் கிடைத்த தகவல் படி
வானிலை அறிக்கை நிலை மாறிவிட்டதாம்.
மழை வராது என்று உறுதி செய்து
கன மழை பெய்யவைத்து விட்டாயே..
உன்னை யார் கோப பட சொன்னது..?



மழை
வராத நேரத்தில் எல்லாம்
குடை பிடிக்க நேரிடுகிறது.எனக்கு
நீ இருக்கும் தைரியத்தில்...




மழைநீர் சேகரிப்பு மையம் அதிகரித்து
விட்டதாம்.. நீ மழையில் நனைவதால்..




நீ மழையில் நனைவதை பார்த்துவிட்டு
அனுமதி பெறாத மழை துளிகள் எல்லாம்
விடுபட்டு வந்து உயிர் இழக்கிறது உன்னிடம்..
காரணமே தெரியாமல்..




உன்னை பார்ப்பதற்கு முட்டி மோதி கொண்டு
கார்மேகங்கள் வருவதனால் தான்
இடி உருவாகின்றதோ..?

*

இப்படிக்கு ஒரு கவிதை.

Filed under: , by: மஹாராஜா



உன்னுடம் நான் பேசிக்கொண்டு இருக்கும்
போது நிஜமாகவே ஒரு தடவை தடுமாறி தான்
போகிறேன்... உனது பேச்சால்..

*

என்னை பற்றி எதாவது கவிதை சொல்லேன்..
இப்படிக்கு ஒரு கவிதை.

*

நமது சந்திப்புக்கு பிறகு விடைபெறும் போது
பரிமாறி கொள்ளும் முத்தங்கள் யாவும்..
ஒரு யுத்தத்தை தான் ஏற்படுத்துகின்றன..

60 - வது சுதந்திர தின வாழ்த்துக்கள்..

Filed under: , by: மஹாராஜா

.




பாரினில் சிறந்த நாடு எங்க பாரத நாடு..
வந்தாரை வாழவைத்து வரவேற்கும் நாடு எங்க பாரத நாடு.
தமிழ் மொழி வளர்ந்த நாடு எங்க பாரத நாடு..
உயர் தலைவர்கள் பல தந்து வழங்கிய நாடு எங்க பாரத நாடு.
தேசத்தின் தன்மை நிதம் மாறாத ஒன்று..
எங்களுக்கு பெயர் ஒன்று உண்டு..இந்தியன் என்று..

தோழர் தோழிகளுக்கும் எனது 60 - வது சுதந்திர தின வாழ்த்துக்கள்..
தலைவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து இந்த சுதந்திரதினத்தை
அமைதியுடனும் பண்புடனும் கொண்டாடுவோம்..

வாழ்க பாரத நாடு... இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்..
ஜெய்ஹிந்த்.........

நீ கோலமிட்டு முடிக்கையில்..

Filed under: , by: மஹாராஜா



பாருங்கள் இவளை...! எவ்வளவு அழகாக
இடம் மாறி மாறி கோலம் போடுகிறாள் என்று..!
இதை எல்லாம் விட்டு விட்டு எதை எதையோ
ஒளிபரப்பு செய்கிறார்கள்....!

*

நீ கோலமிட்டு முடிக்கையில்.. அதில் உள்ள
பூக்கள் எல்லாம் ஏனோ தெரியவில்லை..
உயிர் பெற்று விடுகிறது..

*

அதிகாலை சோம்பேறி-யாகிய நான்
நீ கோலமிட வருகையில் உனது
காவலனாய் நான்... எனக்கே தெரியாமல்..!

*

நீ கோலமிடும் போது வேடிக்கை பார்க்கும்
சிறு குழந்தைகளுக்கு நடுவில் நானும்..
உனது கோலமிடும் அழகை ரசித்து..!

*

உனது வீட்டு பக்கமாய் செல்கையில்..
உன்னை பார்க்காத துக்கத்தை..உனது
கோலம் சிறிது ஆற்றிவிடுகிறது.

*

எ ஃபார் ஆப்பு வைப்பவன்..

Filed under: by: மஹாராஜா

               எனக்கு எப்போதுமே... அடுத்தவங்க பேச்ச கேக்குறதே... ஒத்துவராது..(என்னைக்கு தான் கேட்டு இருக்கோம்..?)இதுல.. நம்ம ஸ்ரீ.. பிரதர்... அவருக்கு வச்சி இருந்த ஆப்பு எடுத்து எனக்கு வச்சிட்டார்.. எனக்கு டைரி ல... கிறுக்குகிறது தான் தெரியும்.. வாழ்க்கையில முதல் தடவையா... பதிவு எழுதுறேன்.. அது எழுத வாய்(ஆ)ப்பு- கொடுத்த எங்க ஸ்ரீ. பிரதர் அவர்களுக்கு கோடான கோடி.. நன்றிகள்... ( நல்லா இரு..ராசா.)..
          நீங்க நெனைக்குற மாதிரி நான் ஒன்னும்... இந்த வெப்சைட் எல்லாம்.. நெட்ல தேடி இங்க பதிவு போடல.. இது எல்லாம் நாங்க எப்போதும் வழக்கமா பாவிக்கிறது தான்..(?) ..


A --> http://www.adhikaalai.com

இங்க போனால்.. காலையிலே அதிகாலை சூரியன் எப்படி ஒரு இதமான சூடான வெயில் தருகிறதோ..அது போல் செய்திகள் இங்கு கிடைக்கும். அரசியல் ,கலை, இலக்கியம் மற்றும் பல செய்திகள் கிடைக்கும்..
காலையில வந்த உடனே... நெட் ஆன் பண்ணி.. இங்க தான் போய் இன்றைய செய்தி படிப்பேன்.. ரொம்ப பயனுள்ளதா இருக்கும்..

          http://www.abdulkalam.com/kalam/index.jsp
டாக்டர்.அப்துல் கலாம்.வாழும் கடவுள்...... தினமும் இவரை வணங்கிவிட்டு தான் எனது பணியை துவக்குவேன்.. அப்படிப்பட்ட இவரை பற்றி தெரிந்துகொள்ள இது ஒரு மிக சிறந்த தளம்..

B --> http://www.blogkut.com

இந்த வெப்சைட் ல .. போய்... கொஞ்சம் பிளாக்கர் எல்லாம் நேரம் இருக்கும் பொது போய் மேய்ந்து விட்டு வருவேன்.. நம்ம தமிழ்மணம் போலவே இருக்கும்.ஆனால்..இன்னும் கொஞ்சம் நிறைய தகவல் கிடைக்கும்..


C --> http://www.cooltoad.com

அனைத்து மொழி சாங்க்ஸ் , வீடியோஸ் , புக்ஸ் இன்னும் நிறைய இங்கு கிடைக்கும்.. ரொம்ப ரொம்ப நல்ல வெப்சைட்.. நிறைய தகவல்கள் இருக்கு.. நான் ரொம்ப பாவிக்கிற இணையதளத்தில் இதுவும் ஒன்று..

          http://www.charuonline.com/

இவருக்கும் , ஜெயமோகனுக்கும் சண்டை வரும் பொது போய்..படிச்சு மனச தேத்திகிறது..

          http://www.cafe.ibibo.com

இது நம்ம ஓர்குட் மாதிரி தான்... நிறைய நண்பர்கள் பெறலாம்..சுலபமாக..இங்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க.. ஆனா போக தான் நேரம் இல்ல..

          http://www.channelhaven.com

அனைத்து விளையாட்டு , டிவி ஆன்லைன் ல பார்க்குறதுக்கு இதவிட ஒரு சிறந்த வெப்சைட் இல்ல. ஆபீஸ் ல ஸ்க்ரீன் சின்னதா வச்சிக்கிட்டு நாங்க எல்லாம் இதுல ஒக்காந்து இருப்போம்..



D --> http://www.dinamalar.com

காலையிலேயே நியூஸ் பேப்பர் படிக்கல என்றால் பயித்தியம் புடிச்ச மாதிரி ஆயிடும். எனக்கு தெரியும்.. இங்க ஏன்டா.. நீ போய் நியூஸ் படிக்கிற என்று கேட்குறது காதுல விழுது.. இங்க போய் நான் விளையாட்டு செய்தி மட்டும் படிப்பேன்.. மத்த நியூஸ் எல்லாம் சுமார் தான்..

          http://www.dinamani.com

இங்க நியூஸ் நடுநிலையா இருக்கும்.. ஆனால் ஏன் இன்னும் இணைய தளத்தை புதுபிக்காம இருக்காங்கனு தெரியல..


E --> http://www.esnips.com

இங்க போய் நிறைய வீடியோ , ஆடியோ, சிறந்த எழுத்தாளர் புத்தகம் இப்படி நிறைய தேடி டவுன்லோட் செய்து கொள்ளலாம்.. ரொம்ப நல்ல வெப்சைட்.


F --> http://www.freevbcode.com

நாம தான்... விசுவல் பேசிக் சிங்கம் என்று சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்ல..( சும்மா சொல்லிக்க வேண்டியது தான்..என்ன பண்ணுறது? ஐந்து வருஷமா அதுல தான் குப்பை கொட்டிகிட்டு இருக்கேன்.). இங்க போனால் நிறைய ப்ரோக்ராம் சுடலாம்.. நம்ம பொழப்பே அதானே.!


G --> http://www.google.com/transliterate/indic/Tamil

தமிழ்ல டைப் பண்ணுறதுக்கு இதவிட ஒரு மிக சிறந்த வெப்சைட் இருக்கும் என்று எனக்கு தோனல.. எப்போதும் இந்த இணைய பக்கம் தொறந்தே இருக்கும்..என் கணினியில்..


H --> http://www.hotmail.com

ரொம்ப நல்ல வெப்சைட்.. மைக்ரோசாப்ட் வாங்குறதுக்கு முன்னாடி.. இருந்தாலும் இதுலயும் ரெண்டு ஈமெயில் அட்ரஸ் இருக்கு..


I --> http://www.123india.com
கிரிகெட் ஸ்கோர் பார்க்குறதுக்கு மட்டும்..இங்க போவுறது..

          http://in.tamil.yahoo.com
சினிமா செய்தி படிக்கிறதுக்கு மட்டும் இங்க போறது.. அதாவது கிசு-கிசு படிக்கிறது என்றால் ரொம்ப பிடிக்கும்..ஹீ.ஹி


J --> http://www.jobsite.com/
உலகம் முழுவதும் வேலை தேடுவதற்கு இது ஒரு மிக சிறந்த தளம்.....
நான் மலேசியா எந்த ஒரு செலவும் இல்லாமல் வந்தது இங்க ரிஜிஸ்டர் பண்ணிதான்.. என்ன ரொம்ப நல்லவன் என்று சொல்லி .. என்னை மலேசியா அனுப்பி வச்ச வெப்சைட் இது..

K --> http://www.keetru.com
          http://www.koodal.com/
தமிழையும்.. தமிழ் செய்திகளையும்.. கவிதைகளையும் அறிந்து கொள்ள.. இது இரண்டும் மிக சிறந்த இணைய தளம்.


L --> www.loosu.com
நீங்க லூசா ஆக வேண்டுமா..? இங்க போங்க .. தானாவே..லூசா ஆயிடுவீங்க..


M --> http://mathy.kandasamy.net/

நம்ம மதியை பற்றி சொல்ல வேண்டுமா.. என்ன? நிஜமாலே இவங்க கிரேட்.நிறைய மூளை இருக்கு. நிறைய எழுதுவாங்க.. நம்ம பதிவர் வட்டத்துல இவங்கள பற்றி கேட்டு பாருங்க.. நம்ம மரத்தடி வெப்சைட் போனவங்களுக்கு தெரிஞ்சு இருக்கும்.

          http://www.moneycontrol.com

ஷேர் மார்கெட் நியூஸ் எல்லாம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இது ஒரு மிக சிறந்த இணைய தளம்.

          http://www.mp3world.com

இங்க திரைப்பட பாடல்கள் இலவசமாக நிறைய டவுன்லோட் செய்யலாம்.

N --> http://www.ndtv.com
ஆங்கில செய்திகளுக்கும் , கிரிகெட் ஒவ்வொரு பந்து-க்கு காம்மேண்டோரி படிக்கவும் மிக சிறந்த வெப்சைட்..

O --> http://www.ottraiandril.com
வாரத்துக்கு இரண்டுமுறை இவருக்கு மொக்க போடுறது தான் வேலை.. அதான் இங்க போய் கொஞ்சம் மனச தேத்திகிட்டு போயிட்டு வந்துடுவேன்.. இவருக்கு போட்டியா இன்னும் ஒருத்தர் கூட மொக்க சூப்பர் ஆக போடுவார்.

P --> http://www.pscode.com
இலவசமாக சாப்ட்வேர் ப்ரோக்ரம்மிங் ( .நெட் , ஜாவா) இப்படி நிறைய கோடிங் இங்க இருந்து சுடலாம்,. உரிச்ச வாழைபழம் போல் எல்லாம் இங்கயே இருக்கும்.. அப்படியே எடுத்து நாம பயன் படுத்தி கொள்ளலாம்.


          http://www.photobacket.com
புகைப்படம் எல்லம் சேமித்து வைக்க இது ஒரு மிக சிறந்த தளம்.

Q --> http://quote.yahoo.com/
இந்திய பங்குச்சந்தை பற்றி தெரிந்து கொள்ள மிக சிறந்த இணைய தளத்தை யாகூ இங்கே வழங்குகுறது,

R --> http://www.rose4you.dk
இங்க தமிழ் , ஹிந்தி , தெலுங்கு பாடல்கள் , பாடல் வரிகள் எல்லாம் கிடைக்கும்.
கூடவே கொஞ்சம் சாட் பண்ணிகிலாம்.

          http://www.rediffland.com
நம்ம பிளாக்கர் மாதிரியே இங்கயும் இருக்கு.. நிறைய கவிதை , தகவல்கள் சேமிக்கலாம்

S --> http://www.sramakrishnan.com
மிக சிறந்த கதாசிரியர்.. உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை.. உன்னாலே உன்னாலே படத்து எல்லாம் இவர் தான் வசனம்.. நல்லா கதை எழுதுவார். இவரின் தேசாந்திரி புத்தகம் ரொம்ப பிடிக்கும்.


T --> http://www.techsatish.com
ஒரு முறை இங்க போயிட்டு வாங்க.. உலகத்துல உள்ள டிவி எல்லாம் பார்க்கலாம்.
எப்.எம் எல்லாம் கேட்கலாம், படம் எல்லாம் பார்க்கலாம். இன்னும் நிறைய இருக்கு..
மூன்று மொழியில இந்த வெப்சைட் இருக்கு.



U --> http://www.Upstream.tv
வீடியோ எல்லாம் நிறய இருக்கும்.. ரொம்ப நல்ல வெப்சைட்,.

V --> http://www.vyoms.com
உங்களுக்கு இந்தியாவுல உள்ள வேலைவாய்ப்பு செய்திகள் எல்லாம் தெரிஞ்சுகொள்ள வேண்டும் என்றால் நீங்க இங்க போய் இங்க பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள்.. ரொம்ப நல்ல வெப்சைட்..

          http://www.vavaasangam.blogspot.com
சிரிப்பதற்கும் , சிந்திப்பதற்கும் எங்களை போன்ற வாலிபர்களுக்கும் இந்த தளம் தான் ஒரு ஆறுதல் தளம்...


W --> http://www.wikipedia.org/
என்னை பொறுத்த வரை உலகின் மிக சிறந்த தளங்களில் இதுவும் ஒன்று,

X --> http://www.xboard.us/

இங்க போனால் நிறைய டவுன்லோட் செய்து கொள்ளலாம்.. நிறைய படம் பார்க்கலாம். நிறைய நிறைய கத்துகலாம்.

Y --> http://www.yellowpages.com/
அடிக்கடி பயன்படுத்துற வெப்சைட்.. நிறைய தெரிஞ்சுக்கலாம்.


Z --> http://www.zapak.com
கேம் எல்லாம் விளையாடுறதுக்கு இதவிட ஒரு நல்ல தளம் எனக்கு தெரியவில்லை.


அப்பாடா... ஒரு வழியா எல்லாம் எழுதி முடிச்சிட்டேன்.. எனக்கு மறந்து போய் இருந்த எ பி சி டி எல்லாம் ஞாபகம் வர உதவியாக இருந்த எனது நண்பர் ஸ்ரீ அவருக்கு ரொம்ப நன்றி..

நான் ஆப்பு வைக்கிற ஆட்கள்.:

1.ரிஷான் ஷெரீப்
2.ஜி
3.நாமக்கல் சிபி.



Rule:

1. The Tag name is A for Apple
2. Give preference for regular sites
3. Ignore your own blogs, sites.
4. Tag 3 People

காதல் அலை..

Filed under: , by: மஹாராஜா


நமது முதல் சந்திபிற்க்கு இந்த
அலை தான் முதல் சாட்சியாக வைக்கிறேன்..
என் காதல் டைரியில்..


உன்னை யார் அன்று அந்த அலையில்
காலை நனைக்க சொன்னது.. பார்த்தாயா...?
இன்று அது தினமும் உன்னை தேடி கரை வரைக்கும்
வந்து செல்கிறது... அடி பாவி..அந்த அலையையே...
அலைய வைத்து விட்டாயே..என்னை பொறுத்த
வரை.. அலையின் காதலும்.. என்னை போல் தான்...


அது என்னவோ தெரியவில்லை... கடற்கரையில் நான்
உனக்கு கொடுத்த முத்தம் எல்லாம்.. இன்று எனக்கு
இந்த அலை கொடுக்கிறது.. நான் மட்டும் தனிமையில்.
உனது காதலன்.......அலையுடன்.


ஆண் அலையும்.. பெண் அலையும்..
ஒன்றை ஒன்று பிடித்து கொள்ள ஓடி பிடித்து
விளையாடியது போல்.. நாமும் விளையாடிய காலங்கள்..
எங்கே..? ஞாபகம் இருக்கிறதா உனக்கு..?


.

காத(லி)லை தேடி..

Filed under: , by: மஹாராஜா

நேற்று வரை நான் உன்னை
தேடி தான் அலைந்தேன்..
கடைசியில் தான் தெரிந்து..
என்னுடைய தேடல் உன்னை பற்றி அல்ல..
என் இதயத்தை தேடி....

--

தேடல் என்ற வார்த்தையே
எனக்கு தேவாரமாக
போய்விட்டது உன்னால்...

--

அன்று உனக்காக தேடி கிடைக்காமல்
போன வண்ணத்துபூச்சி.,
தும்பி எல்லாம் இன்று
என் கையில்... ஆனால் நீ எங்கே..?

--

நான் தேடல் மட்டும் தான்
வாழ்க்கை என நினைத்து
இன்று என் வாழ்க்கையை
தொலைத்து விட்டு நிற்கிறேனடி..!

--

ஈரமான மனதில் காயமாக்கி சென்றவள் நீ தானா.?

Filed under: , by: மஹாராஜா

Orkut Graphics - Love

-


அதெப்படி... நீ மட்டும் அடிக்காமல்,
குத்தாமல் எனது இதயத்தை
காயமாக்கி செல்கிறாய்..?

`````````````````````````````````

சிறு குழந்தைக்கு காலில் வரும்
காயத்தை போல எனக்கும் வருகிறது
காதலில் காயம்...

`````````````````````````````````

நீ முத்தமிட்டு சென்ற இடம்
இன்னும் அழியாத
சுவடாய் என் மனதில்...

`````````````````````````````````

எனது நெஞ்சில் நீ முகம் புதைத்து
அழும் நேரத்தில் காயத்திற்கு
சிறு மருந்து கிடைக்கிறது..

`````````````````````````````````

முதல் நாள் காதல் சொல்ல வந்த நான்
தடுமாறி விழுந்த காயம் தான் நம் காதலின்
முதல் சுவடு...

`````````````````````````````````

காதல் பேருந்து

Filed under: , by: மஹாராஜா

பேருந்தில்.. பயணித்து சென்று நான்
இறங்குகையில்..மீதம் இருப்பது
உன் நினைவுகள் தான்..

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

மீண்டும் மீண்டும் பயணிக்க தோன்றுகிறது..
உனக்கான நினைவுகளுடன்..

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

பேருந்துக்கு நீ காத்து இருக்கையில்..
திசைகாட்டி பலகை
கூட திரும்பி பார்க்கிறது உன்னை...

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

காதலை சொல்ல சொல்ல நான்
வந்து செலலும் அந்த பேருந்து எனக்கு
காதல் பேருந்தே..

நட்ச(சு) திரம்... அவள்..

Filed under: by: மஹாராஜா



இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா யோசிக்கலாம்னு நெனைச்சு ஒரு பெக் பச்ச தண்ணி (உண்மை தானுங்க.) சாப்டுட்டு வந்து மூளைய சொரிஞ்சதுல எனக்கு கொஞ்சம் எகனைக்கு மொகனையா யோசிக்க தோனுச்சு,,. அதன் பிரதிபலிப்பு தான் இங்க..

Oo.......Oo...OO.......oO......

நட்சத்திரங்களை நீ பார்க்கும் போது கூட
நட்சு திரவமாக மாறி விடுகிறது..

Oo.......Oo...OO.......oO......

சூரியன் மன்னிப்பு கோருகிறது உன்னிடம்...
உன்னை பார்த்தவுடன் தான் நான் பிரகாசமாகிறேன்..

Oo.......Oo...OO.......oO......

அந்த கடல் ஓரத்தில் அலை ஒன்றும் சிறு மலை
ஒன்றும் முத்தமிடும் போது நீ சிலையாய் நின்று ரசித்த
காட்சிகள் இன்னும் என் நினைவில்... அழியாமல்.

Oo.......Oo...OO.......oO......

உனது செருப்புகளுக்கு கூட போட்டி நிலவுகிறது..
யாரை முதலில் அணிவது என்று..

Oo.......Oo...OO.......oO......

ரொம்ப ஓவரா யோசிச்சு இருந்தாலும் , மொக்கையா இருந்தாலும் பின்னோட்டம் போட மறந்துடாதீங்க.. கண்டிப்பா பல ________________ எதிர்நோக்கி... நான்..

நினைவுகளுடன்...
மஹா..

தொலைத்து விட்டேன்..என்னை..

Filed under: , by: மஹாராஜா



நித்தம் நித்தம் ஒரு கவிதை எழுதி..
அதில் நினைவெல்லாம் உன்னை சுமந்து ,
காலை சூரியன் கண்திறக்கும் வரை
என் பாவை உனக்கான கவிதை இது..
மீண்டும் உன்னை சந்திப்பதற்கான
ஆசையில் நான் அவசரமாக எழுதிய கவிதை
கூட என்னை பார்த்து சிரிக்கிறது..
கவிதையை பெறும் நீ காதல் வயப்பட்டு
கண்ணாலேயே சிரிப்பாயா..? இல்லை..
மௌனத்தாலேயே கொல்லுவாயா..?
இல்லை.. வேண்டாம் என்று சொல்லி..
நீயே படித்து சொல் என்று என்னிடம் கொஞ்சி
என் மேல் முகம் புதைத்து சிரிப்பாயா..?
இல்லை.. உன் கவிதை பிடித்து இருக்கிறது..
உன்னை பிடிக்கவில்லை என்று சொல்வாயா...?
உனக்கான கவிதை எழுதி முடிக்கையில்..
அங்கு என்னையே நான் தொலைத்து இருந்தேன்,,.
கவிதை எழுதும் போதே உன்னை பற்றியான
சிந்தனைகளை பார்த்தாயா..
நான் காணும் கனவில் கூட உன்னை பற்றியான
நினைவுகள் தான் அன்பே....
மீண்டும் ஒருமுறை சொல்லவேண்டுமா என்ன.?
எந்தன் நிலை பற்றி..? நீயே சொல்....

."."."."."."."."."."."

என்ன சொல்லி அனுப்புவேன்..?

Filed under: , by: மஹாராஜா



விரும்பும் போது விலகி சென்ற அவள்..
இன்று விலகும் போது விரும்பி வந்து நிற்கிறாள்..
நான் என்ன செய்ய?
நீ விட்டுவிட்டு சென்ற நம் காதலும், அதன் நினைவுகளும்
என்னையும் அறியாமல் பாதுகாத்து வருவது தான் தெரியுமா?
காற்றை மட்டும் சுவாசித்த நான் இன்று உன்னையும் சேர்த்து அல்லவா
சுவாசிக்கிறேன்.. அதுவாது தெரியுமா?
நாம் பழகியதற்கு சாட்சியாக இதோ இந்த காதல் கடிதமும்
இருப்பது உனக்கு பிடிக்க வில்லையா?
இதோ..இன்று மட்டும் வந்து என் காதலை கேட்கிறாயே இது
எந்த விதத்தில் நியாயம்?
பதில் சொல் அன்பே..
நான் இப்படியே இருந்துவிடுகிறேன்,..மீண்டும் வேண்டாம் ஒரு காதல் வலி.

......

காத்திருந்து நான்..!

Filed under: , by: மஹாராஜா




இறைவனுக்கே தெரிந்து இருக்கிறது..
நீ பிறக்கும் போதே அழகாக இருந்ததின்
காரணமாக தான் படைத்தான்
அந்த வலது ஓரத்து மச்சம் உன் கன்னத்தில்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன்னுடைய பதிலுக்கு காத்திருந்து நான்
என்ன கேள்வி கேட்டேன் என்றே மறந்து போனேன்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எனக்கு போட்டியாக எனக்கே தெரியாமால்
என் உதடும் , கன்னமும் , என் நெற்றி பொட்டும்
வரிசையில் காத்து இருக்கிறது உன் முத்ததிற்காக...!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அந்த ரோஜாபூக்கு கூட தெரிந்து இருக்கிறது..
என்னவள் இல்லை என்றால் வாடுகிறது என்னை போல..

பூமாலையே..! தோள் சேர வா..!

Filed under: by: மஹாராஜா



சில பூக்கள் அவள் மேல் விழுந்தன..
சில பூக்கள் என் மேல் விழுந்தன....
ஒரு சிறு வித்தியாசம் தான்....

நான் கல்லறையில்...
அவள் மணவறையில்....

சூரிய புலம்பல்..!

Filed under: , by: மஹாராஜா


நான் நாள் முழுவதும் அவள் கூந்தல்
அசைவின் காற்றில் தான் சுவாசிக்கிறேன் .!
நான் வாழ்வதற்கு தேவைப்படும் வெப்பம்
அவள் சிரிக்கும் அந்த வெளிச்சத்தில் தான்..!
அவள் எங்கு இருந்தாலும் அவளை பார்த்து கொண்டு
தான் இருக்கிறேன் ..! நாள் முழுவதும்..!
விடுமுறை நாளில் கூட விடுப்பு எடுக்காமல்..பார்க்க வருகிறேன்.!
உன் விருப்பதிற்க்காக..! இதுநாள் வரை..!

- ஒரு சூரிய பூவின் சந்தோஷ புலம்பல்..!

நானும் உன்னை போலவே தான்.!
வேண்டாம்..பூவே..! வேண்டாம்..!
நீயும் நாளை என்னை போல் ஆகிவிடலாம்..!
நாளையிலிருந்து உன் போக்கை மாற்றி விடு..!
இல்லை என்றால் உன்னையும் ஏமாற்றி விடுவாள்...ஒரு நாள்..!

- நான்..!

கேள்வி-பதில்..!

Filed under: , by: மஹாராஜா


என்னிடம் இருந்து எளிதாய் விடைகளை பெற்று விடும் நீ
என் கேள்விகளை ஏறடுத்தும் பார்ப்பதில்லை..
ஒ..! அன்பே..இப்போதுதான் புரிகிறது...
ஒரு வேலை பிற்காலத்தில் நிறைய பேசுவதற்கு
இப்போதே சேமிக்க தொடங்கி விட்டாயா?...!

வேண்டாம் அன்பே....நீ பேச வேண்டாம்...
உன் ஒரு நொடி பார்வையே போதும்..
நான் உயிர் வாழ..! நம் காதல் வாழ..!

பிரிவினை..!

Filed under: by: மஹாராஜா



காதலே வேண்டாம் என்று சொன்ன உன்னால்...
காதலித்துத்தான் பார் என்றேன்...! காதலித்தோம்..!
எதோ ஒரு சூழ்நிலையால்...
பிரிவோம் என்றோம்..! பிரிந்தோம்..!

பிரிவிற்குப் பின்னான நம் முதல் சந்திப்பில்
எந்தக் காரணமும் சொல்லாமல்
இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி
தழுவி முகம் புதைத்து அழும் போது
நீ வடித்தக் கண்ணீரில்..!
எனக்கு அங்கேயே செத்துவிடவேண்டும் என்று தோன்றியது..!
இனியும் வேண்டாம் அன்பே..ஒரு பிரிவினை,,!

காதல் எஸ்.எம்.எஸ்.

Filed under: , by: மஹாராஜா


ஒவ்வொரு நாளும் அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன் ..!

நீ அழகு என்று ..

நீ என் உயிர் என்று ,

நீ என் வாழ்வென்று ,

நீ என்றும் என்னுடன் வரவேண்டுமென்று ..!

நீயே என் உலகம் என்று ..!

அவள் கடைசியாக ஒரு நாள் கால் பண்ணி கேட்டாள்..!

"Hey..! உனக்கு SMS Free -ya என்று..! .

வெட்கம் ..!

Filed under: , by: மஹாராஜா






நீ வகுப்பறையில் நுழையும் போது
கரும்பலகையும் சிவக்கிறது...
என்னைப்போல..,...!

முத்த மழை!!!!!!!!!

Filed under: , by: மஹாராஜா


நீண்ட பிரிவுக்குப் பிறகு சந்தித்ததும்,
கட்டிப் பிடித்து முத்த மழை பொழிகிறாள்.
“எங்கிட்ட பேசவே மாட்டேன்னு சொன்ன?” என்று கேட்டால்
“பேச மாட்டேன்னு தான சொன்னேன்” என்று
சுவரில் எழுதிக் காட்டுகிறாளே… இவளை என்ன செய்ய?
என் பங்குக்கு நானும் கொஞ்(சு)சம் முத்தமிடுவதைத் தவிர..!

சந்தித்த வேளையில்

Filed under: , by: மஹாராஜா

அன்று நடந்த சந்திப்பிற்கு பின்பு ,

அந்த ஒரு இரவில் நானும் நீயும்
ஒருவரை ஒருவர் செல்லமாய்
நீ என்னை " ச்சீ.. போடா" என்றும் ,
நான் உன்னை "போடி..லூசு" என்றும்
திட்டி கொண்ட காலங்கள் இன்றும் என் நினைவில்.!

இதோ இன்றும் நினைவில் இருக்கிறது,
அன்று நான் தந்த முத்தத்திற்கு , நீ
பதிலேதும் சொல்லாமல் அமைதியாய்
வெட்கப்பட்டு சென்றதும், நானும் உன்னை
பார்க்க முடியாமல் அந்த நொடியில் ,
பார்வை இழந்து நின்றதும்..இன்றும் என் நினைவில்..!

பகல் நேரத்து நிலா எப்படி யாருக்கும் தெரியாமல்
போகிறதோ அதே போல் தான் நானு போகிறேன்..
உன் நினைவுக்கு பிறகு.. ஒரு காதல் பிம்பமாய்..!

நினைவுகள் என்பது நினைப்பது அல்ல...
பல மைல் தூரம் கடந்து நீயும் நானும்
பரிமாறி கொள்ளும் ஒரு ஆழ்ந்த உணர்வு..!
பரிச்சயமாய் நீ எனக்குதான் என்று தெரிந்தும் ,
பரிதவித்து தான் போகிறேன் ஒவ்வொரு நொடியும்..!

ஆத்மா காதல்

Filed under: , by: மஹாராஜா

இன்று என்று இல்லை...
என்றாவது ஒரு நாள் அவள் வருவாள்...
என்னிடம் பேசுவாள்...!
என் காதலை பற்றி பேசுவாள்..!
எனக்கு கட்டி பிடித்து முத்தம் தருவாள்..!
ஆனால் அதை எல்லாம் கான
நான் இருக்க மாட்டேன்..
என் ஆத்மா இருக்கும்..!
உன்னோடு வாழ இந்த உடல் தான் கொடுத்து வைக்க வில்லை..
இதோ இன்று என் ஆத்மாவை விட்டு செல்கிறேன்,
பிடித்து இருந்தால் சொல்..!
மீண்டும் நான் பிறக்கிறேன்... உனக்காக..!
நம் காதலுக்காக..! உன் காதலனாய்..!

நாடோடி காதல்

Filed under: , by: மஹாராஜா





அன்று நீ ஏன் அழுதாய் ..? அழாமல் சென்று இருந்தால்
இன்று நான் நிம்மதியாக இருந்து இருப்பேன்..
நிகழ்வுகள் அனைத்தும் உன்னையே நினைவு படுத்துகின்றன..
அதுவும் ஒரு விதத்தில் நன்மையே எனக்கு..! ஆம்..
இன்று நான் ஒரு காதல் நாடோடியாய் இருக்கிறேனே.!..

உன்நினைவுகள் என்றும் நிலைப்பதில்லை..
நிறுவப்படுகின்றன.. என் காதல் டைரியில்..
தினமும் இரவுகளில் பருகபடுகின்றன..!
நம் காதல்கள்..! உன் நினைவுகளால்..!

01.01.2020 அன்றைய தலைப்புச் செய்திகள..

Filed under: by: மஹாராஜா

மல்லாக்கப் படுத்து வீட்டின் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருந்த நமது நண்பர் ராஜா அவர்கள்் கால எந்திரத்தில் 2020-க்குப் பயணித்தால் என்ன எனத் திடீரென்று தோன்றியது. மூளையைக் கசக்கி அங்கு பத்திரிகைகளில் அவர்் படித்த தலைப்புச் செய்திகளே இவை.

குறிப்பு : இதில் கூறப்படும் செய்திகள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவை அல்ல; சிரித்துவிட்டு மறந்துவிடுங்கள்.
தேதி : 01.01.2020

1. ஸ்பைடர்மேன் பாகம் 15 இன்று வெளியீடு
2. ஆஸ்திரேலியா எட்டாவது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றியது
3. ஐஸ்வர்யாராயின் ஏழாவது திருமணம் - சல்மான், விவேக், அபிஷேக் பங்கேற்பு
4. பெட்ரோல் விலை சற்றே சரிவு– விலை லிட்டருக்கு ரூ. 999 மட்டுமே
5. சன் டிவியில் "கோலங்கள்" 4,450 வது பாகத்தைத் தொட்டது
6. இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கங்குலி தன் பதவியை ராஜினாமா செய்தார்
7. திரிஷாவினுடைய இளைய மகள் ரஜினியின் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் பெயர் எம்.ஜி.ஆர்
8. எட்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் 95 வயதாகும் கலைஞர் கருணாநிதி
9. நடிகர் தனுஷுக்கும், இயக்குனர் சூர்யாவுக்கும் டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது தனியார் பல்கலைக்கழகம்
10. வரலாறு காணாத உயர்வு : பங்குச் சந்தை சென்செக்ஸ் 34,000 புள்ளிகளைத் தொட்டது
11. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உலகப்பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடம். அவரது சொத்துமதிப்பு 1,00,00,00,00,00,00,000 கோடி
12. காஷ்மீர் பிரச்சினையில் விரைவில் சுமூகத் தீர்வு காணப்படும் – பிரதமர் ராகுல் காந்தி
13. சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்
14. இந்தியாவின் மக்கள்தொகை 220 கோடியை எட்டி மகத்தான சாதனை
15. பிரேமானந்தாவின் அப்பீல் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அவர் நிரபராதி எனக் கூறி விடுவித்தார்
16.டாடா இண்டிகாம் தனது புதிய சலுகையை வெளியிட்டது. பத்துத் தலைமுறைக்கு வேலிடிட்டி உள்ள புதிய ப்ரீபெய்டு கார்டின் விலை ரூ. 69
17. ஓசோன் படலம் தடவப்பட்ட குடைகள் அமோக விற்பனை. இக்குடைகள் விற்பனையில் ரிலையன்ஸ் முன்னிலை
18. தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 220 ஆக விலை குறைந்தது. சென்ற வாரம் அது 230 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது